பிரதமர் மோடி - கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தொலைபேசியில் பேச்சு
உலகில் உள்ள பல்வேறு நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசிகளை இந்தியா விநியோகித்து வருகிறது.
புதுடெல்லி,
பிரதமர் மோடியுடன் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தொலைபேசி வாயிலாக பேசியுள்ளார். இந்த தகவலை பிரதமர் மோடி தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். பிரதமர் மோடி இது தொடர்பாக வெளியிட்ட டுவிட்டர் பதிவில், “ எனது நண்பர் ஜஸ்டின் ட்ரூடோவிடம் தொலைபேசி வாயிலாக பேசினேன்.
கனடா கோரியுள்ள கொரோனா தடுப்பூசிகளை விநியோகிக்க இந்தியா தன்னால் முடிந்த அனைத்தையும் செய்யும் என்று அவரிடம் உறுதியளித்தேன். பருவ நிலை மாற்றம் மற்றும் உலகளாவிய பொருளாதார மீட்பு போன்ற பிற முக்கிய விஷயங்களில் தொடர்ந்து ஒத்துழைப்புடன் செயல்பட நாங்கள் ஒப்புக்கொண்டோம்” என்று பதிவிட்டுள்ளார்.