எல்லையில் ஊடுருவ முயன்றவர் சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீரில் உள்ள எல்லையில் ஊடுருவ முயன்றவர் ரணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

Update: 2021-02-10 21:43 GMT
ஸ்ரீநகர், 

ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தின் உரி செக்டர் பகுதியில் எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் பாகிஸ்தானை சேர்ந்த ஒருவர் ஊடுருவ முயன்றார்.

இதை கவனித்த ராணுவத்தினர் அவரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர். அவரது பெயர் சர்பராஷ் மிர் (வயது56) என்பது தெரியவந்தது.

அவரிடம் இருந்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் வழங்கப்பட்ட ஒரு அடையாள அட்டை மற்றும் ஒரு துப்பாக்கியை ராணுவத்தினர் கைப்பற்றினர். கடந்த திங்கட்கிழமை அன்று எல்லையில் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானை சேர்ந்த ஒருவரை எல்லை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர் என்பது குறிப்பிடத்தக்

மேலும் செய்திகள்