கேரளாவில் இன்று 2,212- பேருக்கு கொரோனா தொற்று

கேரளாவில் இன்று 2,212- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2021-02-22 13:56 GMT

திருவனந்தபுரம்,

கேரளாவில் இன்று 2,212- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  தொற்று பாதிப்பில் இருந்து குணம் அடைந்து இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,037- ஆக உள்ளது.  தொற்றுடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 55,468- ஆக இருக்கிறது.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 9 லட்சத்து 77 ஆயிரமாக 012- ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பை கண்டறிய மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் எண்ணிக்கை 38 ஆயிரம் ஆகும்.  கொரோனா பாதிப்பால் இன்று 16 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 4,105- ஆக உள்ளது.

மேலும் செய்திகள்