டெல்லியில் மேலும் 145 பேருக்கு கொரோனா தொற்று

டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 145- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2021-02-23 16:40 GMT
புதுடெல்லி,

டெல்லியில்புதிதாக 145 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, அங்கு மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 6,38,173 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில்  145 பேர்  கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். ஒருவர் பலியாகியுள்ளார். இதுவரை மொத்தம் 6,26,216 பேர் குணமடைந்துள்ளனர். 10,903 பேர் பலியாகியுள்ளனர். கொரோனா தொற்றுடன் 1,054 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

மேலும் செய்திகள்