புனே மாவட்டத்தில் 14-ந்தேதி வரை இரவு நேர ஊரடங்கு நீட்டிப்பு

புனே மாவட்டத்தில் 14 ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

Update: 2021-02-28 19:38 GMT
புனே, 

ஆட்கொல்லி கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக புனே மாவட்டத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது. இந்த ஊரடங்கு இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை அமலில் இருந்தது.

இந்த ஊரடங்கு நேற்றுடன் நிறைவு பெற்ற நிலையில் மாவட்ட கலெக்டர், சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். இதில் கொரோனா தொற்று பரவல் தீவிரமாக இருப்பதாக அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இதையடுத்து ஊரடங்கை வருகிற 14-ந்தேதி வரை நீட்டித்து உத்தரவிடப்பட்டு உள்ளது

இந்த உத்தரவில் இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரையில் பொதுமக்கள் வெளியே நடமாட தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும் புனே மாவட்டத்தில் இயங்கும் பள்ளி, கல்லூரிகளை வருகிற 14-ந்தேதி வரை மூடும்படியும் உத்தரவில் கலெக்டர் கூறியுள்ளார். ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ள ஆன்லைன் வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்