டெல்லி மேற்குப் புறவழிச்சாலையில் ஆறுமணி நேரம் மறியல் போராட்டம் விவசாய சங்கங்கள் அறிவிப்பு

மார்ச் 6ந்தேதி டெல்லி மேற்குப் புறவழிச்சாலையில் ஆறுமணி நேரம் மறியல் போராட்டம் நடத்த உள்ளதாக விவசாய சங்கத் தலைவர் அறிவித்துள்ளார்.

Update: 2021-03-02 09:31 GMT
புதுடெல்லி

புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரி டெல்லியின் எல்லைப் பகுதியான சிங்கு, திக்ரி, காசிப்பூர் ஆகிய இடங்களில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்தும் வகையில் மார்ச் ஆறாம் நாளில் பகல் 11 மணி முதல் மாலை 5 மணி வரை குண்ட்லி - மானேசர் - பால்வால் இடையான டெல்லி மேற்குப் புறவழி விரைவுச் சாலையில் மறியலில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளனர்.

இந்தப் போராட்டத்தில் பங்கேற்கப் பஞ்சாப், அரியானா, உத்தரப்பிரதேச மாநில விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக சம்யுக்த கிசான் மோர்ச்சா தலைவர் பல்பீர் சிங் ராஜேவால் தெரிவித்தார்

மேலும் செய்திகள்