ஆந்திராவில் நிறுத்தப்பட்டிருந்த டிராக்டர் மீது லாரி மோதி விபத்து: 3 பேர் பலி

ஆந்திராவில் நிறுத்தப்பட்டிருந்த டிராக்டர் தள்ளுவண்டி மீது லாரி மோதிய விபத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Update: 2021-03-07 07:52 GMT
கோதாவரி,

ஆந்திரா மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் புட்டாயிகுடெம் அருகே இன்று காலை நிறுத்தப்பட்டிருந்த டிராக்டர் தள்ளுவண்டி மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 17 பேர் காயமடைந்தனர். 

விபத்தில் காயமடைந்தவர்கள் எலுரு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து கோதாவரி மாவட்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்