நடிகர் மோகன்லால் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்
பிரபல நடிகர் மோகன் லால் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை போட்டுக்கொண்டார்.
திருவனந்தபுரம்,
நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கடந்த 1-ம் தேதி முதல் 60 வயதிற்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியுள்ளது. இதில் 60 வயதிற்கு மேற்பட்ட பொதுமக்களும், அரசியல் தலைவர்களும், சினிமா பிரபலங்களும் தடுப்பூசி போட்டு வருகின்றனர்.
அந்த வகையில் பிரபல மலையாள நடிகர் மோகன்லால் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவருக்கு கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் போடப்பட்டது.