போர் விமானம் தரையில் விழுந்து விபத்து விமானப்படை கேப்டன் பலி

போர் விமானம் தரையில் விழுந்து விபத்து விமானப்படை கேப்டன் பலி.

Update: 2021-03-17 22:45 GMT
குவாலியர், 

மத்தியபிரதேச மாநிலம் குவாலியரில் உள்ள இந்திய விமானப்படை தளத்தில் நேற்று காலை வழக்கமான பயிற்சியில் ஈடுபடுவதற்காக மிக்-21 ரக போர் விமானம் புறப்பட்டது. அந்த போர் விமானத்தை விமானப்படை குழு கேப்டன் குப்தா என்பவர் இயக்கினார்.

காலை 10.50 மணியளவில் திடீரென அந்த போர் விமானம் எதிர்பாராத விதமாக தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கேட்பன் குப்தா பரிதாபமாக உயிரிழந்தார். விமான விபத்து தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்