மாவோயிஸ்டுகள் தாக்குதலில் பாதுகாப்பு படையினர் 4 பேர் பலி

மாவோயிஸ்டுகள் வெடிகுண்டு தாக்குதலில் பாதுகாப்பு படையினர் 4 பேர் உயிரிழந்தனர்.

Update: 2021-03-23 14:20 GMT
சத்தீஷ்கர் மாநிலம் நாரயண்பூர் மாவட்டத்தில்  மாவட்ட ரிசர்வ் போலீசார் 27 -பேர்  சென்ற பேருந்தை குறிவைத்து மாவோயிஸ்டுகள் வெடி குண்டு தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் பாதுகாப்பு படையினர் 4 பேர் உயிரிழந்தனர். 15 பேர் காயம் அடைந்தனர். 

இவர்களில் 5 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இந்த சம்பவத்தையடுத்து நிகழ்விடத்திற்கு கூடுதல் படைகள் விரைந்துள்ளன. காயம் அடைந்த வீரர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதல் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக மாவட்ட காவல் துறை அதிகாரி தெரிவித்தார். 

மேலும் செய்திகள்