ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் 2 வீரர்கள் வீர மரணம்
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் 2 வீரர்கள் மரணம் அடைந்தனர். 2 பேர் காயமடைந்தனர்.
புதுடெல்லி
ஜம்மு-காஷ்மீரில் ஸ்ரீநகரின் அவந்திபோரா பகுதியில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் இரண்டு மத்திய ரிசர்வ் போலீஸ் படை, வீரர்கள் 2 பேர் வீரமரணம் அடைந்தனர் மற்றும் இரண்டு பேர் காயமடைந்தனர்.
இந்த தாக்குதலில் லஷ்கர் இ தொய்பா இயக்கம் ஈடுபட்டுள்ளதாக காஷ்மீர் ஐ.ஜி. விஜய் குமார் கூறி உள்ளார்.