ஐ.ஏ.எஸ். அதிகாரி அமுதாவுக்கு பதவி உயர்வு மத்திய அரசு உத்தரவு

மத்திய அரசில் பணியாற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரி அமுதாவுக்கு பதவி உயர்வு அளித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

Update: 2021-03-26 23:05 GMT
புதுடெல்லி, 

மத்திய அரசில் பணியாற்றும் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு பதவி உயர்வு மற்றும் பணி மாறுதல் அளித்து மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

அந்த வகையில் 22 அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 19 பேருக்கு பதவி உயர்வு கிடைத்துள்ளது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி பி.அமுதாவுக்கும் பதவி உயர்வு கிடைத்துள்ளது.

பிரதமர் அலுவலகத்தின் இணைச் செயலாளராக பணியாற்றி வந்த பி.அமுதா அதே அலுவலகத்தின் கூடுதல் செயலாளராக பதவி உயர்வு பெறுகிறார்.

மேலும் செய்திகள்