சத்தீஸ்கரில் கடந்த 24 மணி நேரத்தில் 5,250 பேருக்கு கொரோனா பாதிப்பு

சத்தீஸ்கரில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,69,046 ஆக அதிகரித்துள்ளது.

Update: 2021-04-04 20:17 GMT
ராய்பூர்,

சத்தீஸ்கர் மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 5,250 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அங்கு இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,69,046 ஆக அதிகரித்துள்ளது.

சத்தீஸ்கரில் கடந்த 24 மணி நேரத்தில் 32 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதனால் அங்கு மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 4,319 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் கடந்த 24 மணி நேரத்தில் 2,918 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.

இதன் மூலம் சத்தீஸ்கரில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,26,277 ஆக அதிகரித்துள்ளது. மாநிலம் முழுவதும் தற்போது 38,450 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சத்தீஸ்கர் மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

மேலும் செய்திகள்