கர்நாடகாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்தை தாண்டியது

கர்நாடகாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மின்னல் வேகத்தில் உயர்ந்து வருகிறது.

Update: 2021-04-11 14:15 GMT
பெங்களூரு,

கர்நாடகாவில்  கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கடந்த சில வாரங்களாக அதிகரித்துக் கொண்டே வருகிறது.  இந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் அம்மாநிலத்தில் கொரோனா தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 10,250- ஆக உள்ளது. தொற்றில் இருந்து 2,638- பேர் குணம் அடைந்துள்ள நிலையில், 40 பேர் கொரோனா பாதிப்புக்கு உயிரிழந்துள்ளனர். 

கர்நாடகாவில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 10 லட்சத்து 65 ஆயிரத்து 290- ஆக உயர்ந்துள்ளது. தொற்றில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 9 லட்சத்து 83 ஆயிரத்து 157- ஆக இருக்கிறது. தொற்றுடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 69,225- ஆக  உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 12,889-ஆக அதிகரித்துள்ளது. 

மேலும் செய்திகள்