அருணாசல பிரதேசத்தில் லேசான நில நடுக்கம்

அருணாசல பிரதேசத்தில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

Update: 2021-04-12 16:48 GMT
இடாநகர்,

அருணாசல பிரதேசத்தின் கிழக்கு கமேங் பகுதியில் இன்று லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. இன்று இரவு 9.01 மணியளவில் நிலநடுக்கம் பதிவானது. 

ரிக்டர் அளவில் 3.6 ஆக நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தேசிய புவியியல் ஆய்வு மையம்  தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை. கடந்த சில வாரங்களாகவே வட இந்திய மாநிலங்களில் அவ்வப்போது லேசான நிலநடுக்கம் உணரப்பட்டு வருகிறது. 

மேலும் செய்திகள்