ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 5,086 பேருக்கு கொரோனா பாதிப்பு
ஆந்திர மாநிலத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,42,135 ஆக அதிகரித்துள்ளது.
ஐதராபாத்,
அந்திர மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, அங்கு இன்று ஒரே நாளில் 5,086 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆந்திராவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,42,135 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 14 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்ததையடுத்து, ஆந்திர மாநிலத்தில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7,353 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் கடந்த 24 மணி நேரத்தில் 1,745 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.
இதன் மூலம் ஆந்திராவில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 9,03,072 ஆக அதிகரித்துள்ளது. மாநிலம் முழுவதும் தற்போது 31,710 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக ஆந்திர மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.