ரெயில்களில் ஆக்சிஜன் கொண்டு வர அனுமதிக்க வேண்டும்; மத்திய அரசுக்கு, மராட்டிய மாநில அரசு கோரிக்கை

ரெயில்களில் ஆக்சிஜன் கொண்டு வர அனுமதிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு மராட்டிய அரசு கோரிக்கை விடுத்து உள்ளது.

Update: 2021-04-18 15:32 GMT

ஆக்சிஜன் பற்றாக்குறை

மராட்டியத்தில் 2-வது கொரோனா அலை அசுர வேகத்தில் பரவி வருகிறது. ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 6½ லட்சத்தை நெருங்கி உள்ளது. இதன் காரணமாக ஆஸ்பத்திரிகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அரசு வெளிமாநிலங்களில் இருந்து ஆக்சிஜனை வாங்கி வருகிறது.

ரெயில்களில் ஆக்சிஜன்

இந்தநிலையில் சுகாதாரத்துைற மந்திரி ராஜேஷ் தோபே மராட்டியத்துக்கு ரெயில்களில் ஆக்சிஜன் கொண்டு வர அனுமதிக்குமாறு மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து உள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-

போக்குவரத்து செலவை குறைக்கும் என்பதால் ரெயில்களில் திரவ ஆக்சிஜனை கொண்டுவர அனுமதிக்குமாறு மத்திய அரசை மராட்டிய அரசு கேட்டு கொண்டு உள்ளது. இது குறித்து மத்திய அரசு உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்