முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆர்.பி சிங் தந்தை கொரோனா பாதிப்பால் உயிரிழப்பு
முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆர். பி சிங்கின் தந்தை கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்தார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னள் வேகப்பந்து வீச்சாளர் ஆர்.பி சிங்கின் தந்தை சிவ பிரசாத் சிங் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளர். தனது தந்தை உயிரிழந்த தகவலை ஆர்.பி சிங் தனது சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்களான இர்பான் பதான், பார்தீவ் படேல் ஆகியோர் ஆர்.பி சிங்கின் தந்தை மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் ஆலோசனைக் குழுவில் அங்கம் வகிக்கும் ஆர்.பி சிங், 14-வது ஐபிஎல் தொடரில் வர்ணணையாளர் குழுவிலும் இடம் பெற்று இருந்தார். தந்தைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, உயிரி பாதுகாப்பு வளையத்தில் இருந்து ஏப்ரல் மாதம் உடனடியாக வெளியேறினார்.
அண்மையில் இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் பியூஸ் சாவ்லாவின் தந்தை கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக உயிரிழந்தார்.