கர்நாடகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 39,998- பேருக்கு கொரோனா
கர்நாடகாவில் கடந்த 24 மணி நேரத்தில் 39,998- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பெங்களூரு,
கர்நாடகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 39,998 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கர்நாடகாவில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 20,53,191 ஆக உயர்ந்துள்ளது.
கர்நாடகாவில் கடந்த 24 மணி நேரத்தில் 517 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 20,368 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 34,752 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதுவரை மொத்தம் 14,40,621 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். கொரோனா தொற்று பாதிப்புடன் 5,92,182 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.