உத்தர பிரதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 15,747- பேருக்கு கொரோனா

உத்தர பிரதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 15,747- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2021-05-14 13:30 GMT
லக்னோ,

உத்தர பிரதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 15,747- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  கொரோனா தொற்றில் இருந்து ஒரே நாளில் 26,179-பேர் குணம் அடைந்துள்ளனர். தொற்று பாதிப்பு காரணமாக 312- பேர் உயிரிழந்துள்ளனர். 

உத்தர பிரதேசத்தில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 13 லட்சத்து 85 ஆயிரத்து 855- ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 16,957- ஆக அதிகரித்துள்ளது. மாநிலத்தில் தொற்று பாதிப்புடன் 1 லட்சத்து 93 ஆயிரத்து 815- பேர் சிகிச்சையில் உள்ளனர். 

மேலும் செய்திகள்