அசாமில் நிலநடுக்கம்: ரிக்டரில் 3.8 ஆக பதிவு

அசாமில் இன்று மாலை ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டரில் 3.8 ஆக பதிவாகி உள்ளது.

Update: 2021-05-18 15:24 GMT
தேஜ்பூர்,

அசாம் மாநிலம் தேஜ்பூர் நகரமருகே இன்று மாலை 5.33 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.  இது ரிக்டரில் 3.6 ஆக பதிவாகி உள்ளது.

இதனை தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்து உள்ளது.  நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதியில் வசித்து வரும் மக்கள் பாதுகாப்பு நிறைந்த இடங்களில் தஞ்சம் அடைந்தனர்.  இதனால் ஏற்பட்ட பொருள் இழப்புகள் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை.

மேலும் செய்திகள்