ஒடிசாவில் படகு கவிழ்ந்து விபத்து: ஒருவர் பலி, 8- பேரை தேடும் பணி தீவிரம்
ஒடிசாவின் சிலேரு ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
புவனேஷ்வர்,
ஒடிசா - ஆந்திர பிரதேச மாநில எல்லையில் சிலேரு நதியில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் படகில் பயணம் செய்த புலம் பெயர் தொழிலாளர்கள் நீரில் மூழ்கினர்.
தகவல் அறிந்து விரைந்து வந்த மீட்புக்குழுவினர் ஒருவரை பத்திரமாக மீட்டனர். இன்னும் மாயமான 8 பேரை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.