கொரோனா 2-வது அலை: டெல்லியில் மட்டும் 103 மருத்துவர்கள் உயிரிழப்பு

கொரோனா 2-ம் அலையில் 513 மருத்துவர்கள் நோய்த் தொற்றுக்கு உயிரிழந்திருப்பதாக இந்திய மருத்துவச் சங்கம் தெரிவித்துள்ளது.

Update: 2021-05-26 01:50 GMT
புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா 2-வது அலை பரவல் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா தொற்றுக்கு எதிராக களத்தில் முன் நின்று பணியாற்றும் மருத்துவர்களும் நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இந்த நிலையில், நாடு முழுவதும் கொரோனா 2-வது அலை பரவத்தொடங்கியதில் இருந்து இதுவரை 513-மருத்துவர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.  

இதில் அதிகபட்சமாக டெல்லியில் மட்டும் 103-மருத்துவர்கள், பீகாரில் 96 மருத்துவர்கள், உத்தர பிரதேசத்தில் 41 மருத்துவர்கள், அசாமில் 6 மருத்துவர்கள், தமிழ்நாட்டில் 18 மருத்துவர்கள், கேரளாவில் 4 மருத்துவர்கள், மராட்டியத்தில் 15 மருத்துவர்கள்,உயிரிழந்துள்ளதாக இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது. 

மேலும் செய்திகள்