வரும் திங்கள் கிழமை தென்மேற்கு பருவ மழை துவங்க வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம்

மே 31 ஆம் தேதி தென்மேற்கு பருவமழை துவங்க வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Update: 2021-05-28 05:20 GMT
புதுடெல்லி,

வழக்கமாக கேரளாவில் ஜூன் 1ம் தேதி பருவமழை தொடங்கும். ஆனால், யாஸ் புயல் உதவியால் அரபிக்கடல் பகுதிக்கு பருவமழையை இழுத்துள்ளது என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேற்கு வங்கக் கடலின் பல பகுதிகளிலும், மாலத்தீவு பகுதிகளிலும் மத்திய வங்கக் கடலிலும் தென் மேற்கு பருவமழை முன்கூட்டியேத் தொடங்கும் என்பதால், கேரளாவில் 31-ம்தேதியே பருவமழை தொடங்க சாதகமாக உள்ளது  என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்