உத்தரபிரதேசத்தில் கள்ளச்சாராயம் குடித்த 50 பேர் பலி: 2 கமிஷனர்கள் இடைநீக்கம்

உத்தரபிரதேசத்தில் கள்ளச்சாராயம் குடித்த 50 பேர் பலியான சம்பவத்தில், 2 கமிஷனர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

Update: 2021-06-01 00:10 GMT
கோப்புப்படம்
லக்னோ, 

உத்தரபிரதேசத்தில், அலிகார் கள்ளச்சாராயம் குடித்ததில் சுமார் 50 பேர் பலியானார்கள். இதுதொடர்பாக துரித நடவடிக்கை எடுக்க மாநில அரசுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் அழுத்தங்கள் வந்தது. 

இதையடுத்து தீவிர நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது. இந்த சம்பவத்தில் கலால் வரி கமிஷனர்கள் 2 பேர் உள்பட கலால் வரித்துறையை சேர்ந்த 7 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து கமிஷனர்கள் உள்பட 7 பேரும் நேற்று இடைநீக்கம் செய்யப்பட்டனர். மேலும் கள்ளச்சாராய விற்பனையில் தொடர்புடைய கிராமத்தினர் 17 பேரும் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

மேலும் செய்திகள்