மராட்டிய மாநிலத்தின் பல்வேறு இடங்களில் கனமழை
மராட்டிய மாநிலத்தின் பல்வேறு இடங்களில் இன்று அதிகாலை முதல் கனமழை பெய்து வருகிறது.
மும்பை,
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கோடை வெப்பத்தால் மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர். ஆனால், கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில் பருவமழை தொடங்கும் அறிகுறியாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், மராட்டிய மாநிலத்தின் பல்வேறு இடங்களில் இன்று அதிகாலை முதல் கனமழை பெய்து வருகிறது. தென்மேற்கு பருவமழையின் தொடக்கமாக கனமழை பெய்யத்தொடங்கியுள்ளது.
குறிப்பாக, அம்மாநிலத்தின் மும்பையில் பகுதியில் கனமழை பெய்து வருகிறது. கனமழையால் பல்வேறு பகுதிகளில் உள்ள சாலைகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் சற்றும் சிரமம் அடைந்துள்ளனர்.
கடந்த மாதம் வீசிய யாஷ் புயலிலும் மராட்டிய மாநிலம் மிகுந்த பாதிப்பை சந்தித்தது என்பது குறிப்பிடத்தக்கது.