உ.பி.யில் மீண்டும் மெட்ரோ ரெயில் சேவை தொடங்கியது

உத்தரப் பிரதேசத்தில் ஊரடங்கிற்கு பிறகு மீண்டும் மெட்ரோ ரயில் சேவை நேற்று தொடங்கியது.

Update: 2021-06-09 20:52 GMT

லக்னோ,

கொரோனா இரண்டாம் அலை காரணமாக மெட்ரோ ரயில் சேவையை உத்தரப் பிரதேச அரசு கடந்த 39 நாள்களுக்கு முன்பு நிறுத்தியது.  தொற்று பரவல் தற்போது குறைந்ததையடுத்து உத்தரபிரதேசத்தில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. அதன்படி, மெட்ரோ ரெயில்களும் நேற்று முதல் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.  சமூக டைவெளியுடன் மெட்ரோ ரயில்கள் இன்று மீண்டும் இயக்கப்பட்டது.

 உத்தர பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பரவல் குறைந்து வருகிறது. தொற்று பரவல் குறைந்து வருவதால், மாநிலத்தில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மேலும் செய்திகள்