அருணாசல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டரில் 3.6 ஆக பதிவு
அருணாசல பிரதேசத்தில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
இடாநகர்,
அருணாசல பிரதேசத்தின் வெஸ்ட் காமெங் நகரில் இன்று காலை 4.53 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டரில் 3.6 ஆக பதிவாகி உள்ளது.
இதனை தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்து உள்ளது. எனினும், அதிகாலை என்பதனால், பொருளிழப்புகள் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் உடனடியாக வெளியாகவில்லை.