ஆந்திராவில் மேலும் 4,169- பேருக்கு கொரோனா தொற்று

ஆந்திராவில் மேலும் 4,169- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2021-06-22 12:42 GMT
அமராவதி,

ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 4,169- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றில் இருந்து குணம் அடைந்தவர்கள் 8,376- ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக 53- பேர் இன்று உயிரிழந்துள்ளனர்.  

கொரோனா தொற்றுடன் சிகிச்சை பெறுபவர்கள் 53,880-ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து குணம்  அடைந்தவர்கள் எண்ணிக்கை 17 லட்சத்து 91 ஆயிரத்து 056- ஆக உள்ளது. கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 12,416- ஆக உயர்ந்துள்ளது.

மேலும் செய்திகள்