அரசு பணி உயர்வில் மாற்று திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு உரிமை உள்ளது - சுப்ரீம் கோர்ட் உத்தரவு

கேரள அரசு பணி உயர்வில் மாற்று திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு உரிமை உள்ளது என்று சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.

Update: 2021-06-28 07:10 GMT
புதுடெல்லி, 

அரசு பணி உயர்வில் மாற்று திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு தொடர்பாக கேரளா ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்திருந்தது. 

இந்நிலையில் அரசு பணி உயர்வில் மாற்று திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு உரிமை உள்ளது என்று சுப்ரீம் கோர்ட் இன்று தெரிவித்துள்ளது. மேலும் கேரள ஐகோர்ட்டின் தீர்ப்பு நன்மை தரும் தீர்ப்பு என்றும் கேரள ஐகோர்ட்டின் தீர்ப்பை 3 மாதங்களுக்குள் அமல்படுத்த வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது,

மேலும் செய்திகள்