நாட்டில் அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும் - நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் உறுதி

நாட்டில் அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும்என்று நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் உறுதியளித்துள்ளார்.

Update: 2021-07-01 15:23 GMT
பெங்களூரூ,

கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி போடும் பணிகள் நாடு முழுவதும் மிகவும் வேகமாக நடந்து வருகிறது. இதில் திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை கடந்த 21-ந்தேதி அமல்படுத்திய மத்திய அரசு, இந்த பணிகளை மேலும் முடுக்கி விட்டுள்ளது.

நாடு முழுவதும் தடுப்பூசி பணிகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால் உற்பத்தியாளர்களிடம் இருந்து தடுப்பூசியை மத்திய அரசே கொள்முதல் செய்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறது.

இந்நிலையில், நாட்டில் அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும் என்று நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் உறுதியளித்துள்ளார். இது குறித்து பெஙகளூருவில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறியதாவது:-

நாட்டில் ஒவ்வொரு மாநிலத்திலும் மக்கள் தொகை மற்றும் பாதிப்பு குறித்து தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்து வழங்கப்படுகிறது. மாநிலங்களுக்கு தடுப்பூசிகளை மத்திய அரசு முன்கூட்டியே வழங்குகிறது. தடுப்பூசி வழங்கப்படுவது குறித்து அனைத்து மாநிலங்களும் கவனிக்கப்படும். நாட்டில் அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும் என்று உறுதியளிக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்