குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் - உள்துறை மந்திரி அமித்ஷா சந்திப்பு

குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்தை மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இன்று சந்தித்தார்.

Update: 2021-07-09 09:19 GMT
புதுடெல்லி,

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. இதில் கூட்டுறவுத்துறை என்ற புதிய மத்திய அமைச்சகம் உருவாக்கப்பட்டது. இந்த அமைச்சகத்தை உள்துறை மந்திரி அமித்ஷா கூடுதலாக கவனிக்க உள்ளார். 

கூட்டுறவுத்துறை மாநிலங்களின் கட்டுப்பாட்டில் இருந்து வந்த நிலையில் தற்போது மத்திய அரசு தங்கள் கட்டுப்பாட்டில் புதிதாக கூட்டுறவுத்துறையை உருவாக்கியுள்ளதால் மாநில அரசுகளில் உரிமைகள் பறிபோகலாம் என்ற கருத்துக்கள் நிலவி வருகிறது.

நாட்டின் பல்வேறு மாநிலங்களுக்கு கூட்டுறவுத்துறை மூலம் அதிக நிதி வருவாய் கிடைத்து வரும் நிலையில் ஒருங்கிணைந்த கூட்டுறவுத்துறை வளர்ச்சி என்ற குறிக்கோளுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த அமைச்சகம் அதிக வருவாய் ஈட்டும் மாநில கூட்டுறவுத்துறைகளின் வருவாயை பங்குபோடும் திட்டத்தோடு மத்திய அரசு உள்ளதா? என்ற கேள்விகளை எழுப்பி வருகிறது.

இந்நிலையில், உள்துறை மற்றும் மத்திய கூட்டுறவுத்துறை மந்திரி அமித்ஷா குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்தை ராஷ்டிரபதி பவனில் இன்று சந்தித்தார். 

இந்த சந்திப்பின் போது முக்கிய விவராங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கூட்டுறவுத்துறையின் மந்திரியாக கூடுதல் பொறுப்பை ஏற்ற பின்னர் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்தை உள்துறை மந்திரி அமித்ஷா சந்திக்கும் நிகழ்வு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருத்தப்படுகிறது.  

மேலும் செய்திகள்