ஆந்திராவில் இன்று 4,576 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்தனர்

ஆந்திராவில் தற்போது 30,300 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2021-07-09 15:19 GMT
அமராவதி,  

ஆந்திர மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, அங்கு இன்று புதிதாக 3,040 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து ஆந்திராவில் இதுவரை பதிவு செய்யப்பட்ட மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 19,17,253 ஆக உயர்ந்துள்ளது. 

ஆந்திராவில் இன்று 14 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் அங்கு இதுவரை கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12,960 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் ஆந்திராவில் இன்று ஒரே நாளில் 4,576 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். 

ஆந்திராவில் கொரோனா பாதிப்பு காரணமாக தற்போது 30,300 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில், இதுவரை 18,73,993 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்