டெல்லியில் பிரதமர் மோடியுடன் மம்தா பானர்ஜி வரும் 28ந்தேதி சந்திப்பு
டெல்லியில் பிரதமர் மோடியை மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி வரும் 28ந்தேதி சந்தித்து பேச இருக்கிறார்.
கொல்கத்தா,
மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி கூறும்போது, டெல்லிக்கு அடுத்த வாரம் செல்கிறேன். ஜனாதிபதியை சந்திக்க அனுமதி கிடைத்தால் சந்திப்பேன். பத்திரிகை அலுவலகத்தில் வருமான வரி துறை சோதனை நடத்துவது ஆபத்தான போக்கு. அது கண்டனத்துக்குரியது. பெகாசஸ் ஒட்டு கேட்பு விவகாரம் மிக மோசமானது.
இந்த அரசு தனது மந்திரிகளையே நம்பவில்லை. நாட்டில், சூப்பர் எமர்ஜென்சி நிலவுவதை இது காட்டுகிறது என கூறினார். என்னை சந்திக்க பிரதமர் எனக்கு நேரம் ஒதுக்கியுள்ளார். இதனால், டெல்லியில் பிரதமர் மோடியை வரும் 28ந்தேதி சந்தித்து பேச இருக்கிறேன் என்று மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.