மராட்டியத்தில் குழந்தைகளுக்கான போக்குவரத்து பூங்கா திறப்பு
மராட்டியத்தில் குழந்தைகளுக்கான போக்குவரத்து பூங்கா வடிவமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டு உள்ளது.
புனே,
மராட்டியத்தின் புனே நகரில் குழந்தைகளுக்கான போக்குவரத்து பூங்கா ஒன்றை மாநகராட்சி வடிவமைத்து உள்ளது. போக்குவரத்து விதிகள் மற்றும் சாலை பாதுகாப்பு ஆகியவற்றை பற்றி குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இதனை திறந்துள்ளனர்.
இந்த பூங்காவானது, சிறிய வகை போக்குவரத்து சிக்னல்கள் மற்றும் நகர சாலைகள் என அனைத்து வித அம்சங்களுடனும் வடிவமைக்கப்பட்டு உள்ளன என்று செயற்பொறியாளர் திங்கர் கோஜாரே கூறியுள்ளார்.