டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 50 பேருக்கு கொரோனா
டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 50 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 50 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து 65 பேர் குணம் அடைந்துள்ள நிலையில், இன்று 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனாதொற்றுடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 519- ஆக உள்ளது. டெல்லியில் கொரோனா தொற்று பாதிப்பால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 25,058- ஆக உள்ளது. தொற்று பாதிப்பு விகிதம் 0.08 சதவிகிதமாக உள்ளது.