டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 50 பேருக்கு கொரோனா

டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 50 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2021-08-03 12:50 GMT
புதுடெல்லி,

டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 50 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து 65 பேர் குணம் அடைந்துள்ள நிலையில், இன்று 4 பேர் உயிரிழந்துள்ளனர். 

கொரோனாதொற்றுடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 519- ஆக உள்ளது. டெல்லியில் கொரோனா தொற்று பாதிப்பால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 25,058- ஆக உள்ளது.  தொற்று பாதிப்பு விகிதம் 0.08 சதவிகிதமாக உள்ளது. 

மேலும் செய்திகள்