சிறுமியை கற்பழித்து கொன்றவர்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும்: அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்தல்

9 வயது சிறுமியை கற்பழித்து கொன்றவர்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்று டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

Update: 2021-08-03 20:35 GMT
கோப்புப்படம்
புதுடெல்லி, 

தேசிய தலைநகர் டெல்லியில் 9 வயதான சிறுமி கற்பழித்து கொல்லப்பட்டார். இது தொடர்பாக இடுகாட்டு பாதிரியார் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த விவகாரம் பற்றி டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தனது டுவிட்டரில், “9 வயது சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்தி கொலை செய்தது மிகவும் வெட்கக்கேடானது. டெல்லியில் சட்டம் ஒழுங்கை மேம்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. குற்றவாளிகளுக்கு விரைவில் மரண தண்டனை வழங்கப்பட வேண்டும்” என்று அவர் இந்தியில் பதிவிட்டிருந்தார்.

மேலும் “பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தை நாளை சந்திக்கப் போகிறேன், நீதிக்கான இந்த போராட்டத்தில் குடும்பத்திற்கு உதவ எல்லாவற்றையும் செய்வேன்” என்றும் அவர் குறிப்பிட்டு உள்ளார்.

இதற்கிடையே டெல்லி பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ராஜேந்திர பால் கவுதம் நேற்று முன்தினம் சிறுமியின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறினார். "இந்த விவகாரத்தில் முழுமையான, சரியான விசாரணை நடைபெறவில்லை என்று நாங்கள் கருதினால், மாஜிஸ்திரேட் விசாரணையை நடத்துவோம்" என்று அவர் உறுதி கூறினார்.

மேலும் செய்திகள்