ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதி சுட்டுக்கொலை
ஜம்மு காஷ்மீர் புட்காமின் மோச்வா பகுதியில் பாதுகாப்பு படையினருடன் நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் அடையாளம் தெரியாத பயங்கரவாதி ஒருவர் கொல்லப்பட்டார்.
ஜம்மு,
ஜம்மு மற்றும் காஷ்மீர் புட்காமின் மோச்வா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளனர் என கிடைத்த உளவு தகவலை அடுத்து அந்த பகுதியை பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் திடீரென பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதற்கு வீரர்களும் தக்க பதிலடி கொடுத்தனர்.
இந்த தாக்குதலில் அடையாளம் தெரியாத ஒரு பயங்கரவாதி சுட்டு கொல்லப்பட்டார். என்கவுண்டர் நடந்த இடத்தில் ஒரு ஏகே 47 துப்பாக்கி மற்றும் ஒரு கைத்துப்பாக்கி மீட்கப்பட்டது. அந்த பகுதியில் பாதுகாப்பு படையினர் தொடர்ந்து தேடுதல் வேட்டையை நடத்தி வருகின்றனர்.