காஷ்மீர்: பாதுகாப்பு படையினர் மீது பயங்கரவாதிகள் கையெறி குண்டு வீசி தாக்குதல்

காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் மீது பயங்கரவாதிகள் கையெறி குண்டு வீசி தாக்குதல் நடத்தினர்.

Update: 2021-08-10 09:56 GMT
ஸ்ரீநகர்,

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் ஸ்ரீநகர் மாவட்டத்தில் உள்ள ஹரி சிங் சாலையில் பாதுகாப்பு படையினர் இன்று மாலை 3 மணியளவில் வழக்கமான பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

அப்போது, அங்கு வந்த பயங்கரவாதிகள் சிலர் பாதுகாப்பு படையினர் மீது கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச்சென்றனர். இந்த தாக்குதலில் பொதுமக்கள் சிலர் காயமடைந்தனர். 

இந்த தாக்குதலை தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளது. மேலும், குண்டுவீச்சு தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச்சென்ற பயங்கரவாதிகளை தேடும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

மேலும் செய்திகள்