டெல்லியில் குறைந்து வரும் கொரோனா; இன்று 50 பேருக்கு தொற்று உறுதி

டெல்லியில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

Update: 2021-08-13 18:27 GMT
புதுடெல்லி,

டெல்லி மாநில சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், மாநிலத்தில் இன்று மேலும் 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 14,36,988 ஆக அதிகரித்துள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. டெல்லியில் இதுவரை கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 25,068 ஆக உள்ளது. அதே சமயம் டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 84 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். 

இதனால் கொரோனா தொற்றிலிருந்து இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 14,11,452 ஆக உயர்ந்துள்ளது. டெல்லியில் தற்போது 468 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக டெல்லி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.டெல்லியில் குறைந்து வரும் கொரோனா; இன்று 50 பேருக்கு தொற்று உறுதி

புதுடெல்லி,

டெல்லியில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

டெல்லி மாநில சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், மாநிலத்தில் இன்று மேலும் 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 14,36,988 ஆக அதிகரித்துள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. டெல்லியில் இதுவரை கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 25,068 ஆக உள்ளது. அதே சமயம் டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 84 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். 

இதனால் கொரோனா தொற்றிலிருந்து இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 14,11,452 ஆக உயர்ந்துள்ளது. டெல்லியில் தற்போது 468 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக டெல்லி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்