மராட்டியத்தில் புதிதாக 4,797 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு

மராட்டிய மாநிலத்தில் தற்போது 64,219 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2021-08-15 18:33 GMT
மும்பை,

மராட்டிய மாநில சுகாதாரத்துறை நேற்று(ஆகஸ்ட் 15) வெளியிட்ட அறிவிப்பின்படி, மாநிலம் முழுவதும் மேலும் 4,797 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மராட்டியத்தில் இதுவரை பதிவான மொத்த கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 63,92,660 ஆக அதிகரித்துள்ளது.

மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 130 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,35,039 ஆக அதிகரித்துள்ளது. அதே சமயம் ஒரே நாளில் 3,710 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். 

இதன் மூலம் மராட்டியத்தில் இதுவரை கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 61,89,933 ஆக அதிகரித்துள்ளது. தற்போது வரை மாநிலத்தில் 64,219 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக மராட்டிய மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்