பீகாரில் 11 கட்டங்களாக பஞ்சாயத்து தேர்தல்

பீகார் மாநிலத்தில் பஞ்சாயத்து தேர்தல் 11 கட்டங்களாக நடைபெறும் என மாநில தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

Update: 2021-08-25 03:21 GMT
பாட்னா,

பீகார் மாநிலத்தில் வார்டு உறுப்பினர், பஞ்சாயத்து தலைவர், பஞ்சாயத்து கமிட்டி உறுப்பினர், மாவட்ட கவுன்சில் உறுப்பினர் உள்ள பல்வேறு பதவிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. 

மொத்தம் உள்ள 2,59,260 பதவிகளுக்கு நடைபெற உள்ள பஞ்சாயத்து தேர்தலில் 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் போட்டியிட உள்ளனர்.

இந்நிலையில், பீகார் பஞ்சாயத்து தேர்தல் 11 கட்டங்களாக நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. முதல் கட்ட தேர்தல் செப்டம்பர் 24-ம் தேதி நடைபெறுகிறது. 

இறுதிகட்ட தேர்தல் டிசம்பர் 12-ம் தேதி வரை நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் ஒவ்வொரு கட்ட தேர்தல் நடந்து முடிந்த இரண்டாவது நாளில் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்