போலீஸ் நிலைய சிறைக்குள் குற்றவாளிகள் மதுபானம் அருந்தும் வீடியோ
டெல்லியில் போலீஸ் காவலில் இருந்த குற்றவாளிகள் சிறைக்குள் மதுபானம் அருந்தும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
புதுடெல்லி
டெல்லியில் வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்ட சகோதரர்களான ராகுல் காலா மற்றும் நவீன் பாலி ஆகியோர் போலீஸ் நிலையத்தில் விசாரணைக்காக சிறை வைக்கப்பட்டிருந்தனர். பிரபல ரவுடி நீரஜ் பாவனா உடன் வைக்கப்பட்டு இருந்த அவர்கள் சிறைக்குள் சகல வசதிகளுடனும் மதுபானம் அருந்துவதும் அதேபோல் மொபைல் பொன் பயன்படுத்துவதும் அந்த வீடியோவில் பதிவாகி உள்ளது.
இதுதொடர்பாக விளக்கமளித்துள்ள டெல்லி போலீசார் இதுதொடர்பாக உரிய விசாரணை மேற்கொள்ளப்படும் என கூறி உள்ளனர்.