6-12ம் வகுப்புகள் வரும் செப்டம்பர் 1 முதல் திறப்பு; மத்திய பிரதேச முதல்-மந்திரி அறிவிப்பு
மத்திய பிரதேசத்தில் 6 முதல் 12 வரையிலான வகுப்புகள் வரும் செப்டம்பர் 1ந்தேதி முதல் திறக்கப்படும் என முதல்-மந்திரி கூறியுள்ளார்.
போபால்,
மத்திய பிரதேசத்தின் முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் கூறும்போது, மத்திய பிரதேசத்தில் 6 முதல் 12 வரையிலான வகுப்புகள் வரும் செப்டம்பர் 1ந்தேதி முதல் திறக்கப்படும். அரசு மற்றும் தனியார் என அனைத்து பள்ளிகளும் 50 சதவீத மாணவர்களுடன் செயல்படும் என முதல்-மந்திரி கூறியுள்ளார்.
தொடர்ந்து அவர், 9 முதல் 12 வரையிலான வகுப்புகள் வாரத்திற்கு இரண்டு முறை செயல்பட்டு வந்தன. இனி, இந்த வகுப்புகள் தினமும் செயல்படும் என்றும் கூறியுள்ளார்.
ஒன்று முதல் 5 வரையிலான வகுப்புகளை தொடங்குவது பற்றி ஒரு வாரத்திற்கு பின்பு முடிவு செய்யப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.