உத்தரகாண்ட்: மேகவெடிப்பால் பெருமழை - 4 பேர் பலி
உத்தரகாண்ட் மாநிலத்தில் மேகவெடிப்பால் பெய்த பெருமழையில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர்.
டேராடூன்,
உத்தரகாண்ட் மாநிலத்தின் பித்ரோகிராப் மாவட்டம் ஜும்மு கிராமத்தில் மேகவெடிப்பு காரணமாக இன்று இடி மின்னலுடன் பெருமழை பெய்தது.
இந்த பெருமழையால் திடீரென வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டது. இந்நிலையில், மேகவெடிப்பால் ஏற்பட்ட இடி, மின்னல் மற்றும் வெள்ளப்பெருக்கில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர். 2 பேர் படுகாயமடைந்தனர். மேலும், 3 பேர் மாயமாகினர்.
வெள்ளத்தில் சிக்கி மாயமானவர்களை தேடும் பணியில் மீட்புப்பணியினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.