ராஜஸ்தான் சாலை விபத்து: பிரதமர் மோடி இரங்கல்

ராஜஸ்தானில் லாரி மீது கார் மோதி ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

Update: 2021-08-31 05:53 GMT
நகாவுர்,

ராஜஸ்தானின் நகாவுர் பகுதியில் சென்று கொண்டிருந்த கார் ஒன்று லாரி மீது இன்று காலை திடீரென மோதி விபத்து ஏற்பட்டது.  இந்த விபத்தில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்து உள்ளனர். இதுதவிர 7 பேர் காயமடைந்து உள்ளனர்.  

காயமடைந்தவர்கள் பிகானிர் பகுதியில் நோக்கா என்ற இடத்தில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு உள்ளனர். அங்கு அவர்களுகு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த விபத்துபற்றி ஸ்ரீபாலாஜி காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், ராஜஸ்தானில் லாரி மீது கார் மோதி ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

ராஜஸ்தான் மாநிலம் நகாவுரில் நடந்த சாலை விபத்து மிகவும் வேதனை அளிக்கிறது. விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும் எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன், மேலும் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்