தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம் உத்தரவு

காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க கர்நடக அரசுக்கு காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது

Update: 2021-08-31 09:25 GMT
பெங்களூரு,

காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க கர்நாடக  அரசுக்கு காவிரி நதிநீர் மேலாண்மை  ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்திற்கு தர வேண்டிய 30.6 டி.எம்.சி காவிரி நீரை வழங்க காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 

ஜூன் ஜூலை ஆகஸ்ட் மாதத்திற்கு தர வேண்டிய 30.6 டி.எம்.சி நிலுவையை உடனே திறக்க வேண்டும் என கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.  செப்டம்பர் மாதத்திற்கு வழங்க வேண்டிய தண்னீரையும் காவிரியில் உடனே திறந்து விடவும் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 

மேலும் செய்திகள்