பீகாரில் கனமழை வெள்ளம்; 43 பேர் பலி

பீகார் மாநிலத்தில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Update: 2021-08-31 12:25 GMT
பாட்னா,

பீகார் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், அம்மாநிலத்தில் உள்ள பல்வேறு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. 

ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் அம்மாநிலத்தில் உள்ள 14 மாவட்டங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால், மக்கள் மிகுந்த பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர். வெள்ளத்தால் இதுவரை 30 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில், அம்மாநிலத்தில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இதுவரை 43 பேர் உயிரிழந்துள்ளனர். வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மீட்புப்பணிகள் மற்றும் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளை பீகார் முதல்-மந்திரி நிதீஷ் குமார் இன்று நேரில் பார்வையிட்டார்.

மேலும் செய்திகள்