அசாமில் இரவு நேர ஊரடங்கு அறிவிப்பு

அசாமில் இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2021-09-01 11:13 GMT
கவுகாத்தி, 

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாமில் புதிய வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி, அங்கு இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுளது. மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களில் இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என்று  மாநில அரசுதெரிவித்துள்ளது. 

கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள இடங்கள் கட்டுபடுத்தப்பட்ட மையங்களாக அறிவிக்கப்பட்டு  கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதேவேளையில், அவசர சேவைகளுக்கு 24 மணி நேரமும் அனுமதி உண்டு என  அசாம் அரசு அறிவித்துள்ளது.  அலுவலகங்கள், வணிக நிறுவனங்கள், தொழில் கூடங்கள் ஆகியவை இரவு 8 மணிக்கு மேல் இயங்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்