டெல்லியில் தொடர்ந்து 5-வது நாளாக இன்றும் கொரோனா மரணங்கள் இல்லை

டெல்லியில் தொடர்ந்து 5-வது நாளாக இன்றும் கொரோனா மரணங்கள் பதிவாகவில்லை.

Update: 2021-09-05 12:55 GMT
புதுடெல்லி, 

தலைநகர் டெல்லியில் கொரோனாவின் 2-வது அலை வெகுவாக குறைந்து விட்டது. அங்கு சமீப நாட்களாக கொரோனா மரணங்கள் அதிகம் நிகழவில்லை.

இந்நிலையில் டெல்லியில், இன்று மேலும் 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 14,37,959 ஆக அதிகரித்துள்ளது. மாநிலத்தில் கொரோனா பாதிப்பு விகிதம் 0.05 சதவீதமாக உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மாநிலத்தில் ஒருவர் கூட கொரோனா தொற்றால் உயிரிழக்கவில்லை. இதன்மூலம் கொரோனா மரணம் இல்லாத நாளாக நேற்றும் முடிந்திருக்கிறது. அந்த வகையில் இது தொடர்ந்து 5-வது நாளாகும். மொத்தத்தில் கொரோனா 2-வது அலையில் உயிரிழப்பு நிகழாத 24-வது நாள் என்பது மகிழ்ச்சிக்குரியதாகும்.

மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 33 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 14,12,526 ஆக உயர்ந்துள்ளது. 

டெல்லியில் தற்போது 351 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக டெல்லி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்